Friday, August 20, 2004

வதம் - ஒரு விளக்கம்
====================

பாபா பற்றிய எனது முந்தைய பதிவை எழுதி முடித்து விட்டு ஒரு நிமிடம் யோசித்தேன், இது தேவையா என்று. நல்லதோ, கெட்டதோ, நண்பரோ மூன்றாமவரோ எனக்கு எதையும் நேரடியாக சொல்லித்தான் பழக்கம். இம் மாதிரி மறைபொருளாக சொல்லி பழக்கமில்லை. ஆனால் இந்த விஷ(ம)யத்தை இப்படித்தான் அவர்கள் ஸ்டைலிலேயே அணுகவேண்டும் என்று முடிவெடுத்தவுடன் என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு அனுப்பினேன் - என்னடா ..இதைப் போடலாமா.? என்ற கொக்கியோடு. தாராளமா போடு. யாராவது இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்றதோடு மட்டுமில்லாமல் உனக்கு இதைப் பதிக்க யோசனையாய் இருந்தால் நான் செய்கிறேன் என்றான். இல்லை என்று நானே பதிப்பித்தவுடன், இதற்கு பதிவில் பின்னூட்டம் தந்தவர்களைவிட தொலைபேசியிலும், தனிமடலிலும் தொடர்பு கொண்டவர்கள் மிக அதிகம். அப்போதுதான் அட...இந்தக் கருமம் பிடிச்ச பதிவைப் போட்டு நம்ம வலைப்பூவை அசிங்கப்படுத்திகிட்டாலும், நல்லதுதான் நடந்திருக்கு என நினைத்துக் கொண்டேன்.சம்பந்தப்பட்டவர்கள் இன்னமும் திருந்தாமல், நேரடியாக இதை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் வழக்கம்போல cut and paste வித்தையிலும், வீணாய்ப்போன குட்டிக் கதைகளிலும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். கடைக்கு ஆள் பிடிக்கும் அவசரத்தில் இது மாதிரியானதை எல்லாம் அவர்கள் கேட்க வேண்டியிருக்கிறது....பாவம்.

நீங்கள் என்ன நினைத்து இதைச் செய்தீர்களோ அது நடந்து, அவர்கள் முகத்திரை கிழிந்து விட்டது. இனி அது எதற்கு. பதிவை நீக்கி விடுங்கள் என்று என் அமெரிக்க நண்பர் ஒருவரும், கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக என் எழுத்துக்களோடு பரிச்சயம் உள்ள என் இந்திய ஸ்நேகிதியும் அறிவுறுத்தினார்கள்.

எனவே அந்தப் பதிவு நீக்கப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...