Monday, August 16, 2004

சுதந்திர தின சோக்குகள்
=====================

p74

‘‘ஆமா... அடிதடி மல்லுக்கட்டுனா சினிமால பொளக்கறீங்களே, அது எப்பிடிங்க?’’ ஆர்வமாகக் கேட்டார்கள்.

‘‘எல்லாம் ஒரு வேகம்தான். ஊர்ல உலகத்துல நடக்கிற அநியாயத்தைப் பாக்கிறப்போ ஒரு வெறி வரும்ல. அதையெல்லாம் மொத்தமா சேர்த்து வெச்சு வாய்ப்பு கிடைக்கிறப்போ வெளுத்து எடுத்துர்றதுதான்!’’ \ விஜயகாந்த் மீசையை முறுக்கிக் காட்ட, கூட்டம் கை தட்டியது.

ரொம்ப நேரமாக கஞ்சி சட்டியுடன் காத்திருந்த ஒரு அம்மாவிடம், ‘‘அது என்னது?’’ என்றார். ‘‘கஞ்சி சாமி...’’ என்று அந்த அம்மா தயக்கமாகச் சொல்ல, ‘‘கொண்டாங்க’’ என்று வாங்கி, கடக் கடக்கென்று குடித்தார் விஜயகாந்த். நானும் இதையெல்லாம் குடிச்சு வளர்ந்தவன்தான். நாம என்ன லண்டன்லயா பொறந்து வளர்ந்தோம்? என்று சொல்ல, கன்னத்தில் கைவைத்து ரசித்தது கூட்டம்.

( கேப்டன் ஷூட்டிங் ஞாபகத்திலேயே இருக்காரு. கலைத் தாகம் ..ம்ம்ம் )

p11

அண்ணாச்சி... சோப்பு போட்டுக்கறீங்களா?’’ என வைகோவை கட்சிக்காரர் ஒருவர் கேட்க, ‘‘வேணாம்... வேணாம். ஐயாயிரம் ஆண்டுக்கு முன்னால எந்தத் தமிழன் சோப் போட்டு குளிச்சான்? எனச் சிரித்தபடி அரைமணி நேரம் தாமிரபரணித் தண்ணீரில் ஜாலியாக நீச்சலடித்தார் வைகோ.

( ஐயாயிரம் வருஷம் முன்னாடி தமிழன் ஷார்ட்ஸ் போட்டிருந்தான் என்பதறிக...)

p92

பரிணாம வளர்ச்சி...???!!! ( சின்ன எம்.ஜி.ஆர் திருநாவு )

தத்துவம் நெம்பர் 10010:

சுதந்திரம்ங்கிறது கடவுள் மாதிரி. கடவுள் பேரை சொல்லி சாமியாடி இளம்பெண்களை கற்பழிக்கலாம். அதே கடவுள் பேரைச் சொல்லி ஆதரவற்றவர்களுக்கு கஞ்சி ஊத்தலாம். படிக்க வைக்கலாம்.

பார்க்கிறவர்களின் பார்வையைப் பொறுத்தது அது.

சுதந்திர தின வாழ்த்துக்கள்...

( குவாண்டம் இயற்பியல் மாதிரி விடுதலை நாள் வாழ்த்து சொன்ன சுந்தரவடிவேலுவின் நக்கல் .... நச். )


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...